ADDED : நவ 26, 2024 06:27 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காற்றழுத்த தாழ்வு நிலையையொட்டி, கனமழையை எதிர் கொள்ள, பொதுமக்கள் உதவிக்காக பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள 112 மற்றும் 1077 எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து, கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
வங்க கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில், வரும் 29ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதை எதிர்கொள்ள மேலாண்மை துறையில், 112 மற்றும் 1077 ஆகிய உதவி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். குறுந்தகவல் புகார்களை மட்டும் வாட்ஸ் அப் 9488981070 எண்ணை பயன்படுத்தி, கொள்ளலாம். இவ்வாறு அந்த அவர் தெரிவித்துள்ளார்.
