sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

12 பேரிடம் ரூ. 11.51 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை

/

12 பேரிடம் ரூ. 11.51 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை

12 பேரிடம் ரூ. 11.51 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை

12 பேரிடம் ரூ. 11.51 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை


ADDED : ஜன 16, 2025 05:56 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 12 பேர், 11 லட்சத்து 51 ஆயிரம் இழந்துள்ளனர்.

திலாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் மேரிஜூலி. இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், சென்னை ஏர்போர்ட் சுங்கவரி அதிகாரி பேசுவதாக கூறி, உங்களது பெயரில் 70 ஆயிரம் டாலர் மதிப்பிலான பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலை பெறுவதற்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர். இதை நம்பிய மேரிஜூலி ரூ. 5.80 லட்சத்தை செலுத்தி ஏமாந்தார்.

வில்லியனுார், பரசுராமபுரம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் மங்கலட்சுமி. இவர் இணையதளத்தில் வந்த துணி விளம்பரத்தை நம்பி 1 லட்சத்து 23 ஆயிரத்து 686 ரூபாய் செலுத்தி துணிகளை ஆர்டர் செய்தார். ஆனால் துணி வரவில்லை. பின் அவர் பணம் செலுத்திய இணையதளம் போலி என்பது தெரியவந்தது.

மூலகுளத்தைச் சேர்ந்த ஆனந்தராயலு என்பவரை தொடர்பு கொண்ட நபர் குறைந்த வட்டியில் ரூ. 1.5 லட்சம் கடன் தருவதாக கூறினார். இதைநம்பி லோன் பெற விண்ணப்பித்து செயலாக்க கட்டணமாக 36 ஆயிரத்து 917 ரூபாய் செலுத்தி ஏமாந்தார்.

முத்திரையர்பாளையத்தை சேர்ந்த அறிவரசன் 2 லட்சத்து 21 ஆயிரம், பாரதி தாசன் நகர் அருண்குமார் 25 ஆயிரம், ரெட்டியார்பாளையம் அருண்பிரசாத் 25 ஆயிரம், தவளக்குப்பம் சுரேஷ் 18 ஆயிரத்து 558 ரூபாய், பாக்கியராஜ் 14 ஆயிரம், புதுச்சேரி அஸ்வதி 90 ஆயிரம், காரைக்கால், கோட்டுசேரி மணிகண்டன் 10 ஆயிரம், கருவடிக்குப்பம் ராமலிங்கம் 1,050, சாமிபிள்ளை தோட் டம் ஸ்ரீதரன் 6 ஆயிரம் என, மொத்தம் 12 பேரிடம் மோசடி கும்பல் 11 லட்சத்து 51ஆயிரத்து 289 ரூபாய் ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்துபுகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us