/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை 15 பேர் கைது
/
பொது இடத்தில் ரகளை 15 பேர் கைது
ADDED : அக் 13, 2024 07:24 AM
புதுச்சேரி,: கோரிமேடு அடுத்த தட்டாஞ்சாவடியில், பொது இடத்தில் சிலர் ரகளையில் ஈடுபடுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார், அங்கு சென்று, ரகளையில் ஈடுப்பட்ட, திலாசுபேட்டை பிரபு, 33; சாமிபிள்ளை தோட்டம் சஞ்சய், 19; மற்றும் கனரக வாகனம் நிறுத்தும் இடத்தில் ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் ஏழுமலை, 53; ஹரிகரன், 52; ஆகியோரை கைது செய்தனர்.
அதே போல, மேட்டுப்பாளையத்தில் ரகளையில் ஈடுப்பட்ட மேட்டுப்பாளைம் ஆனந்தன், 24; சரத்குமார், 24; ரெட்டியார்பாளையத்தில் ரகளை செய்த மூர்த்தி, 24; ேஹமச்சந்திரன், 21; பெரியக்கடை அருகே ரகளை செய்த மோகன்,43; கார்த்தி, 33; முத்தியால்பேட்டையில் தகராறு செய்த மணிகண்டன், 48; ஒதியஞ்சாலையில் மில்கி, 40; உருளையன்பேட்டை பகுதியில், ஸ்டீபன், 29; மார்சேல், 27; ஐசக் அம்பர், 22; ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.