/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிதி நிறுவனத்தில் ரூ.16 லட்சம் மோசடி; அதிகாரிகளிடம் போலீஸ் விசாரணை
/
நிதி நிறுவனத்தில் ரூ.16 லட்சம் மோசடி; அதிகாரிகளிடம் போலீஸ் விசாரணை
நிதி நிறுவனத்தில் ரூ.16 லட்சம் மோசடி; அதிகாரிகளிடம் போலீஸ் விசாரணை
நிதி நிறுவனத்தில் ரூ.16 லட்சம் மோசடி; அதிகாரிகளிடம் போலீஸ் விசாரணை
ADDED : பிப் 16, 2024 06:57 AM
புதுச்சேரி: பணத்தை முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ. 16 லட்சம் மோசடி செய்த தனியார் நிதி நிறுவன அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாகி பிராந்தியம் சூர்யோதயம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன், 48; இவர் அதே பகுதியில், சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். சிமி எல்டோஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தின், மேலாண் இயக்குனராக இருக்கும் அனில் சக்கரபாணி என்பவர், முரளிதரனிடம் எங்கள் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி, முரளிதரன், தனது மகள் படிப்பிற்க்காக் வைத்திருந்து ரூ. 16 லட்சத்தை அந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு டெபாசிட் செய்தார். ஓராண்டு ஆகிய அந்த நிறுவனத்தில் இருந்து லாப பணம் எதுவும் வரவில்லை.
இதுபற்றி, அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளிடம் கேட்டார். ஆனால், அவர்கள் வேறு காரணம் கூறி காலம் கடத்தி வந்தனர்.
இதுகுறித்து, முரளிதரன் மாகி போலீசில் நிதி நிறுவன மேலாண் இயக்குனர் உட்பட 7 பேர் பண மோடிக்கு உடைந்தாக இருந்ததாக புகார் செய்தனர்.
இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, அனில் சக்கரபாணி உட்பட 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.