ADDED : ஜன 10, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம : பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூராக ஆபாசமாக பேசிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை ஏ.எப்.டி.,மில் சாலையில் நேற்று இரண்டு பேர் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆபாசமாக பேசுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
அங்கு சென்ற போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர். முதலியார்பேட்டை தில்லை நாட்டார் தெருவை சேர்ந்த சரவணன், 25; வாழகுளத்தை சேர்ந்த பாரத், 20; என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

