sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'ஓசி' சிகரெட் கேட்டு வியாபாரியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

'ஓசி' சிகரெட் கேட்டு வியாபாரியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

'ஓசி' சிகரெட் கேட்டு வியாபாரியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது


ADDED : ஏப் 05, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 04:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோரிமேட்டில் ஓசி சிகரெட் கேட்டு, டீ கடை வியாபாரியை கத்தியால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிஷ், 23; ஜிப்மர் மருத்துவமனை எதிரே டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் திலாஸ்பேட்டை, வீமன் நகரை சேர்ந்த வீரப்பன் மகன் சசிக்குமார், 24; குருமாம்பேட் ஆறுமுகம் மகன் கிருஷ்ணராஜ், 22; ஆகியோர் மதுபோதையில் ஹரிஷ், கடைக்கு சென்று ஓசியில் சிகரெட் கேட்டனர்.

இதற்கு, ஹரிஷ் பணம் கொடுக்காமல், முடியாது என கூறினார். ஆத்திரமடைந்த சசிக்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால், ஹரிஷின் முகத்தில் வெட்டியும், கிருஷ்ணராஜ் கடையில் இருந்த சோடா பாட்டிலை எடுத்து, ஹரிஷின் தலையில் தாக்கியும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த ஹரிஷ் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவர், அளித்த புகாரின் பேரில், கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, சசிக்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது அடிக்கடி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us