/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீசிங் பிரச்னையால் 2 மாத குழந்தை சாவு
/
வீசிங் பிரச்னையால் 2 மாத குழந்தை சாவு
ADDED : ஜன 09, 2025 06:20 AM
புதுச்சேரி: அரும்பார்த்தபுரத்தில் வீசிங் பிரச்னையால் 2 மாத ஆண் குழந்தை இறந்தது.
அரும்பார்த்தபுரம், சண்முகம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 31; பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு மூன்றரை வயதில் மகனும், 2 மாத ஆண் குழந்தை சத்யதேவ் இருந்தனர்.
சத்யதேவ்வுக்கு வீசிங் பிரச்னை இருந்து வந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு, குழந்தை சத்யதேவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். உடன் எல்லப்பிள்ளைச்சாவடி ராஜிவ் காந்திஅரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.