/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
20 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
20 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 15, 2025 09:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், பொது மக்கள் தவறவிட்ட 20 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோரிமேட்டில் உள்ள சைபர் போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., பாஸ்கரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். 30க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று, சைபர் கிரைம் தொடர்பாக பல்வேறு புகார்களை தெரிவித்தனர். பொது மக்கள் தவறவிட்ட ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான 20 மொபைல்கள் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.