/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி ராணுவ வீரரிடம் பயிற்சி பெற்ற 23 பேர் எஸ்.ஐ., தேர்வில் தேர்ச்சி
/
மாஜி ராணுவ வீரரிடம் பயிற்சி பெற்ற 23 பேர் எஸ்.ஐ., தேர்வில் தேர்ச்சி
மாஜி ராணுவ வீரரிடம் பயிற்சி பெற்ற 23 பேர் எஸ்.ஐ., தேர்வில் தேர்ச்சி
மாஜி ராணுவ வீரரிடம் பயிற்சி பெற்ற 23 பேர் எஸ்.ஐ., தேர்வில் தேர்ச்சி
ADDED : பிப் 09, 2026 04:39 AM
புதுச்சேரி: முன்னாள் ராணுவ வீரரின் இலவச பயிற்சி பள்ளியில், பயிற்சி பெற்ற 23 பேர் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
முன்னா ள் ராணுவ வீரரான பெரியசாமி, 17 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின், புதுச்சேரியில் கடந்த 2022ம் ஆண்டு போலீஸ் பணிக்கான இலவச பயிற்சி பள்ளியை துவங்கி, ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.அவரிடம், பயிற்சி பெற்று 2022ம் ஆண்டு 13 பேரும், 2023ம் ஆண்டு 97 பேரும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதேபோல், தற்போது நடந்த போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வில், 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதேபோல், சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற்தகுதி தேர்வில், இவரது பயிற்சி பள்ளியில் பயின்ற ஆண்கள் 18 பேரும், பெண்கள் 4 பேரும், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் என, மொத்தம் 23 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் வரும் 22ம் தேதி நடக்கவுள்ள எழுத்து தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.

