sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

/

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது


ADDED : அக் 16, 2025 11:32 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதிய பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

மறைமலையடிகள் சாலை, புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபர்களை பிடித்து சோதனை செய்தனர்.

அவர்கள், தடை செய்யப்பட்ட கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

விசாரணையில், முத்தியால்பேட்டை, லுார்து நகரைச் சேர்ந்த சரவணன், 47; சாரம், சக்தி நகர் மணிகண்டன், 35; குயவர் பாளையம், நாயக்கர் தோப்பு விக்னேஷ், 31; ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு மூன்று இலக்க எண்களை, உண்மையான லாட்டரி சீட்டுகள் என, 30 ரூபாய்க்கு பொதுமக்களிடம் வாட்ஸ் அப் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 மொபைல் போன்கள், ரூ.10 ஆயிரம் பணம், மூன்று இலக்க லாட்டரி சீட்டு ஆகியவை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us