/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரிகளுக்கு 3 நாள் விடுமுறை
/
கல்லுாரிகளுக்கு 3 நாள் விடுமுறை
ADDED : ஏப் 07, 2026 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தலையொட்டி, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை 9ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு பதிவு நடைபெற உள்ளது. அதையொட்டி, ஏற்கனவே அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கு இன்று (8ம் தேதி) முதல் நாளை மறுநாள் 10ம் தேதி வரை, ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.

