ADDED : பிப் 14, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். குருவிநத்தம் சாலையில் மூன்று பேர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக திட்டியபடி ரகளையில் ஈடுபட்டனர்.
அங்கு சென்ற போலீசார்அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடலுார் நத்தவெளியை சேர்ந்த சசிதரன் 32, கருணாகரன் 34, மற்றும் கண்ணாரப்பேட்டை சேர்ந்த சக்திவேல், 32, ஆகியோர் என, தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர்.