/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்ற 3 பேர் கைது 500 கிராம் பறிமுதல்
/
கஞ்சா விற்ற 3 பேர் கைது 500 கிராம் பறிமுதல்
ADDED : பிப் 09, 2024 05:49 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை சோலை நகர், கல்லறை அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, முத்தியால்பேட்டை போலீசார், நேற்று அந்த பகுதியில், சோதனை நடத்தினர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். மூவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
மேலும், அவர்களை போலீசார் விசாரணை செய்ததில், முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 30; மணி, 28; ஹரிகரன், 38, ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 500 கிராம் கஞ்சா மற்றும் 5,500 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

