sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மிரட்டி ரகளை; புதுச்சேரியில் 3 வாலிபர்கள் கைது

/

கத்தியை காட்டி மிரட்டி ரகளை; புதுச்சேரியில் 3 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டி ரகளை; புதுச்சேரியில் 3 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டி ரகளை; புதுச்சேரியில் 3 வாலிபர்கள் கைது


ADDED : மே 31, 2025 05:11 AM

Google News

ADDED : மே 31, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அரசு பள்ளி அருகே பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு பள்ளி அருகே 3 பேர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியுடன் புல்லட்டில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், கொசப்பாளையத்தை சேர்ந்த ரிஷி (எ) ரிஷிகுமார், 25; கடலுார், பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரிதிவிராஜன், 25; இடையார்பாளையம், என்.ஆர். நகர் தமிழசன், 25; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 கத்தி, 2 மொபைல், புல்லட் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us