ADDED : பிப் 20, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம் : ராமநத்தம் அருகே மினி லாரி மோதி 30 ஆடுகள் இறந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், அரியங்குடியை சேர்ந்தவர் முருகேசன், 45. இவர், தனக்கு சொந்தமான ஆடுகளை வட மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி வந்து, கிடை அமைத்து வருவாய் ஈட்டி வந்தார்.
நேற்று அதிகாலை 6:00 மணியளவில், ராமநத்தம் - கொரக்கவாடி சாலையில், ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற போது, அவ்வழியே பின்னால் வந்த மினி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில், 30 ஆடுகள் அதே இடத்தில் இறந்தன. ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

