sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

32 மணி நேர தொடர் யோகாசனம் ஆச்சார்யா பள்ளி மாணவன் சாதனை

/

32 மணி நேர தொடர் யோகாசனம் ஆச்சார்யா பள்ளி மாணவன் சாதனை

32 மணி நேர தொடர் யோகாசனம் ஆச்சார்யா பள்ளி மாணவன் சாதனை

32 மணி நேர தொடர் யோகாசனம் ஆச்சார்யா பள்ளி மாணவன் சாதனை


ADDED : ஜூலை 11, 2011 11:40 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உலகிலேயே அதிக நேரம் யோகாசனம் செய்து ஆச்சார்யா பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த யாஷ்மின் புடகோஸ்வா என்ற பெண்,தொடர்ச்சியாக 32 மணி நேரம் யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்தார். இதே போல் ஆண்களில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த யோகா ஆசிரியர் மிஷல் 29.45 மணி நேரம் தொடர்ச்சியாக யோகாசனம் செய்து சாதனை படைத்திருந்தார். இதனை முறியடிக்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி கடந்த 9ம்தேதி காலை 7 மணிக்கு புதுச்சேரி ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில் துவங்கியது.



இப்பள்ளி 9ம் வகுப்பு மாணவன் அருணாசலம் இடைவெளி இல்லாமல் யோகாசனம் செய்து அசத்தினான். பெரியவர்களே சிரமப்படும், கால பைரவ ஆசனம், சக்ரபந்த ஆசனம், ஏக பாத சிரசாசனங்களை அனைவரும் வியக்கும் வகையில் சுலபமாக செய்து காட்டினான். 32 மணிநேரம் கடும் முயற்சிக்கு பின் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு உலகிலேயே அதிக நேரம் யோகாசனம் செய்த ஆண் நபர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்தார். கடந்த 7ம் தேதி ஆச்சார்யா சிக்ஷா பள்ளி 10ம் வகுப்பு மாணவி அபிராமி தொடர்ச்சியாக 36 மணி நேரம் யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிக நேரம் யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்த ஆச்சார்யா பள்ளி மாணவர்களை, ஆச்சார்யா கல்வி நிறுவனர் அரவிந்தன் உள்பட பலர் பாராட்டினர்.










      Dinamalar
      Follow us