/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் வரும் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: 81,334 குழந்தைகளுக்கு ஏற்பாடு
/
புதுச்சேரியில் வரும் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: 81,334 குழந்தைகளுக்கு ஏற்பாடு
புதுச்சேரியில் வரும் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: 81,334 குழந்தைகளுக்கு ஏற்பாடு
புதுச்சேரியில் வரும் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: 81,334 குழந்தைகளுக்கு ஏற்பாடு
ADDED : மார் 01, 2024 02:50 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வரும் 3ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 81,334 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து வழங்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்தாண்டு ஐந்து வயதிற்குட்பட்ட 81,334 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 3 ம்தேதி புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் புதுச்சேரி 63,853 குழந்தைகளும், காரைக்காலில் 12,257 , மாகி 1,685 குழந்தைகளும் மற்றும் ஏனாம் 3,539 குழந்தைகளும் மொத்தம் 81,334 குழந்தைகளை கண்டறிந்து சொட்டு மருந்து போட சுகாதார துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
வீட்டிற்கு அருகில்
அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கல்லுாரி, ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அவரவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் குழந்தைகளுடன் சென்று சொட்டு மருந்து போட்டு கொள்ளலாம்.
பொதுமக்கள் கூடும் இடங்கள்
பேருந்துநிலையம், ரயில்வே நிலையம், கடற்கரைச்சாலை, மணக்குள விநாயகர்கோயில், தாவரவியல்பூங்கா, ஊசுட்டேரி மற்றும் சுண்ணாம்பார் படகுக்குழாம், போகோ லேண்ட், போத்திஸ், ப்ரொவிடன்ஸ் மால் ஆகிய இடங்களிலும் சொட்டு மருந்து முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி -தமிழ்நாடு எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியகோயில், திருக்கனுார், மற்றும் குருமாம்பேட் ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ஆங்காங்கே நடமாடும் போலியோ நடமாடும் ஊர்திகள் மூலமாகவும் புதுச்சேரி பகுதியிலும் போலியோ சொட்டு மருந்து போடப்பட இருக்கின்றது.
கட்டுப்பாட்டு அறை
போலியோ சொட்டு மருந்து முகாமினை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி , ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது.

