sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நீர் மேலாண்மையில் தேசிய அளவில் பொதுப்பணித் துறைக்கு 3ம் பரிசு

/

நீர் மேலாண்மையில் தேசிய அளவில் பொதுப்பணித் துறைக்கு 3ம் பரிசு

நீர் மேலாண்மையில் தேசிய அளவில் பொதுப்பணித் துறைக்கு 3ம் பரிசு

நீர் மேலாண்மையில் தேசிய அளவில் பொதுப்பணித் துறைக்கு 3ம் பரிசு


ADDED : அக் 25, 2024 06:27 AM

Google News

ADDED : அக் 25, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பில் தேசிய அளவில் சிறந்து விளங்கிய புதுச்சேரி மாநிலத்திற்கு மூன்றாம் பரிசை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

டில்லியில், கடந்த 22ம் தேதி,5வது தேசிய நீர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் தேசிய அளவில் நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பில் சிறந்து விளங்கியதற்காக புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் மூன்றாவது பரிசினை வழங்கியுள்ளது.

இதையடுத்து புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்புப் பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் (நீர்பாசனக் கோட்டம்) ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலைகள் கோட்டம்) பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று முன்தினம் சட்டசபையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் விருதை வழங்கி வாழ்த்துப் பெற்றனர். அப்போது சபாநாயகர் செல்வம் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us