ADDED : ஜன 20, 2025 06:26 AM
பாகூர்: கிருமாம்பாக்கத்தில் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில், நான்கு பேர் காயமடைந்தது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார், முதுநகர் சீமான் தோட்டத்தை சேர்ந் தவர் நசீர் அகமது 46; பெயின்டர். இவரது மனைவி சாரா பிவீ 35. இருவரும் கடந்த 14ம் தேதி புதுச்சேரி சென்று விட்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவமனை எதிரே சென்ற போது, எதிர் திசையில் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது.
இந்த விபத்தில், நசீர் அகமது, அவரது மனைவி சாரா பீவி, மற்றொரு பைக்கில் வந்த சுபாஷ், அவரது நண்பர் அருள்முருகன் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.