sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

4 பேரிடம் ரூ. 1 லட்சம் 'அபேஸ்'; மோசடி கும்பல் அட்டூழியம்

/

4 பேரிடம் ரூ. 1 லட்சம் 'அபேஸ்'; மோசடி கும்பல் அட்டூழியம்

4 பேரிடம் ரூ. 1 லட்சம் 'அபேஸ்'; மோசடி கும்பல் அட்டூழியம்

4 பேரிடம் ரூ. 1 லட்சம் 'அபேஸ்'; மோசடி கும்பல் அட்டூழியம்


ADDED : மே 30, 2025 04:43 AM

Google News

ADDED : மே 30, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; புதுச்சேரி, குருமாம்பேட்டை சேர்ந்த பெண் நபரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் பணம் செலுத்தி, அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதை நம்பிய அப்பெண் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைனில் 26 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி, மோசடி கும்பலிடம் பணத்தை ஏமாந்தார்.

முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறியதுடன், கடனுதவி பெற செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.அதனை நம்பி, அப்பெண் 4 ஆயிரத்து 850 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.

இதேபோல், தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபர் 52 ஆயிரத்து 319, புதுச்சேரியைச் சேர்ந்த நபர்16 ஆயிரத்து 597என, மொத்தம் 4 பேர் ரூ. 1 லட்சத்து 266 ரூபாய் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.

புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us