sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனியார் கம்பெனியில் திருடிய 5 பேர் கைது

/

தனியார் கம்பெனியில் திருடிய 5 பேர் கைது

தனியார் கம்பெனியில் திருடிய 5 பேர் கைது

தனியார் கம்பெனியில் திருடிய 5 பேர் கைது


ADDED : டிச 21, 2024 06:36 AM

Google News

ADDED : டிச 21, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் தனியார் கம்பெனியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரிக்கலாம்பாக்கம் - பாகூர் சாலையில் உள்ள தனியார் கம்பெனிக்குள் கடந்த ஜூன் 9ம் தேதி இரவு மர்ம நபர்கள் புகுந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கம்ப்யூட்டர், 5 மானிட்டர்களை திருடிச்சென்றனர்.

கம்பெனி சீனியர் மேலாளர் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்த சிலரை அழைத்து விசாரணை நடத்தினர்.

அதில் கம்பெனியில் வேலை செய்த தனிக்குப்பத்தைச் சேர்ந்த முருகன், அவர் நண்பர்கள் மூலம் திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில், கரிக்கலாம்பாக்கம் தியாகராஜன், கீழ் குமாரமங்கலம் அய்யப்பன், அஜித், செல்லஞ்சேரி அருண்குமார் ஆகியோர் சேர்ந்து திருடியது தெரியவந்தது.

அவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us