தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வக்கீல் வீட்டில் 5 சவரன் திருட்டு

வக்கீல் வீட்டில் 5 சவரன் திருட்டு

வக்கீல் வீட்டில் 5 சவரன் திருட்டு


ADDED : அக் 03, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வழக்கறிஞர் வீட்டில் 5 சவரன் நகைகளை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை, காக்கையாந்தோப்பை சேர்ந்தவர் அரவிந்த், 44; வழக்கறிஞர். நெய்வேலியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் காலை குடும்பத்துடன்சென்றார். இரவு வீடு திரும்பினார்.

அறையில் இருந்த பீரோவில் சாவி தொங்கிய நிலையில் இருந்தது. லாக்கரில் இருந்த, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சவரன் நகைகள், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us