/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசுத்துறை இயக்குனர்கள் 6 பேர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு
/
அரசுத்துறை இயக்குனர்கள் 6 பேர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு
அரசுத்துறை இயக்குனர்கள் 6 பேர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு
அரசுத்துறை இயக்குனர்கள் 6 பேர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு
ADDED : அக் 31, 2024 05:51 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு துறையில் பணிபுரியும், 6 இயக்குனர்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெற உள்ளனர்.
மத்திய அரசு, உயர் பதவி வகிக்கும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு, அவ்வப்போது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசுத்துறைகளில் பணிபுரியும், குடிமைப்பணி அதிகாரிகளான இயக்குனர்கள் பதவி மூப்பின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெற உள்ளனர்.
இந்த பட்டியலில், கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, அறிவியல் தொழில் நுட்பத்துறை இயக்குனர் ரெட்டி, வணிக வரித்துறை ஆணையர் முகமது மன்சூர், சிறைத்துறை ஐ.ஜி., ரவி தீப்சிங் சாகர், தொழில்துறை இயக்குனர் ருத்ர கவுடு, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகிய 6 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.