sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆன்லைன் மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ.9.90 லட்சம் இழப்பு

/

ஆன்லைன் மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ.9.90 லட்சம் இழப்பு

ஆன்லைன் மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ.9.90 லட்சம் இழப்பு

ஆன்லைன் மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ.9.90 லட்சம் இழப்பு


ADDED : நவ 07, 2024 02:40 AM

Google News

ADDED : நவ 07, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் 6 பேர், ஆன்லைன் மோசடி கும்பலிடம் 9.90 லட்சம் ரூபாயை இழந்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த கனகவள்ளி என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பிய கனகவள்ளி ஆன்லைன் வர்த்தகத்தில் பல தவணைகளாக 5 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். இதேபோல், நடேசன் நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் 1 லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.

அரியாங்குப்பம் பாலசுந்தரம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 708 ரூபாய், கோவிந்தசாலை சரண்யா 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், சண்முகாபுரம் கணேசன் 87 ஆயிரத்து 880 ரூபாய், கணேஷ் கிருஷ்ணா 5 ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் 6 பேர் நேற்று முன்தினம் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 9 லட்சத்து 89 ஆயிரத்து 608 இழந்துள்ளனர்.

இதுகுறித்த, புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us