sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

6 பேரிடம் ரூ. 3.71 லட்சம் 'அபேஸ்'

/

6 பேரிடம் ரூ. 3.71 லட்சம் 'அபேஸ்'

6 பேரிடம் ரூ. 3.71 லட்சம் 'அபேஸ்'

6 பேரிடம் ரூ. 3.71 லட்சம் 'அபேஸ்'


ADDED : பிப் 21, 2025 04:40 AM

Google News

ADDED : பிப் 21, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலி ஆன்லைன் பங்குசந்தையில் முதலீடு செய்து, காரைக்கால் வாலிபர் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்தார்.

காரைக்காலை சேர்ந்த பாரத் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதை நம்பிய பாரத், மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் பங்கு சந்தையில் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 110 அனுப்பி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

லாஸ்பேட்டையை சேர்ந்த காளியப்பன் என்பவரை தொடர்பு கொண்ட நபர், குறைந்த வட்டியில் ரூ. 2 லட்சம் லோன் தருவதாக கூறியுள்ளார்.இதைநம்பி காளியப்பன் லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து, காளியப்பன் 47 ஆயிரத்து 350 அனுப்பி ஏமாந்தார்.

இதேபோல், முதலியார்பேட்டையை சேர்ந்த ஆர்த்தி 28 ஆயிரத்து 505, புதுக்குப்பத்தை சேர்ந்த சிலம்பரசன் 18 ஆயிரத்து 600, வாணரப்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி 8 ஆயிரம், பெரிய காலாப்பட்டு பிரியதர்ஷினி 18 ஆயிரம் என 6 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 51 ஆயிரத்து 565 ரூபாயை இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us