sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாராய ஆலையை இயக்க 6 கிராம மக்கள் எதிர்ப்பு

/

சாராய ஆலையை இயக்க 6 கிராம மக்கள் எதிர்ப்பு

சாராய ஆலையை இயக்க 6 கிராம மக்கள் எதிர்ப்பு

சாராய ஆலையை இயக்க 6 கிராம மக்கள் எதிர்ப்பு


ADDED : ஜன 04, 2024 03:26 AM

Google News

ADDED : ஜன 04, 2024 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளையத்தில், தனியார் சாராய ஆலையை கொண்டு வர ஆறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முதல்வரிடம் மனு கொடுத்தனர்.

முதல்வர் ரங்கசாமியை லிங்காரெட்டிப்பாளையம், காட்டேரிக்குப்பம், சந்தைபுதுக்குப்பம், சுத்துக்கேணி, ரங்கநாதபுரம், நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து அளித்த மனு;

லிங்காரரெட்டிப்பாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு தனியார் சாராய ஆலையின் கழிவு நீர் ஆற்றில் கலந்து மாசு ஏற்பட்டது.

கால்நடைகள், மீன்கள் இறந்தன. நிலத்தடி நீர் மட்டமும் படுபாதாளத்திற்கு சென்று, விவசாயமும் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து ஆலைய அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டபோது கூட, எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் மீண்டும் சாராய ஆலையை கொண்டு வரும் முயற்சி நடப்பது கண்டு அதிர்ச்சியாக உள்ளது.

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்த கூடிய சாராய ஆலை தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க அரசு அனுமதிக் கூடாது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us