/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
7 பேரிடம், ரூ. 5 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
/
7 பேரிடம், ரூ. 5 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
7 பேரிடம், ரூ. 5 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
7 பேரிடம், ரூ. 5 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
ADDED : டிச 19, 2024 06:38 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேரிடம், 5 லட்சம் ரூபாயை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ரெட்டியார்பாளைத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, அவர், மர்ம நபர் அனுப்பிய லிங் மூலம், 1.93 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
அதே போல், சுப்பையா நகரை சேர்ந்த மீனாட்சி என்பவரை தொடர்பு கொண்ட நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதைநம்பி அவர், தனது வங்கி கணக்கில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயை, அனுப்பி ஏமாந்தார்.
சாரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், கோல்டு மைனிங் செய்து லாபம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அந்த ஆசையில், அவர், 60 ஆயிரம் அனுப்பி, ஏமாந்தார்.
துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன், 40 ஆயிரம், காரைக்கால் விக்னேஷ், 20 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த அருண்குமார் 32 ஆயிரம், சண்புகாபுரம் அனுஷா, 50, ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தனர்.
இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.