sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

79 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரமா? ஒதியஞ்சாலை போலீசார் தீவிர விசாரணை

/

79 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரமா? ஒதியஞ்சாலை போலீசார் தீவிர விசாரணை

79 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரமா? ஒதியஞ்சாலை போலீசார் தீவிர விசாரணை

79 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரமா? ஒதியஞ்சாலை போலீசார் தீவிர விசாரணை


ADDED : செப் 21, 2024 06:25 AM

Google News

ADDED : செப் 21, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 79 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்த புகார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த 79 வயது பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டி நேற்று காலை 4:00 மணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார். முகத்தில் கீறல் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, தன்னை ஒரு கும்பல் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக டாக்டர்களிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அனுப்பட்டது.

கிழக்கு எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் துய்மா வீதி ஓட்டலில் விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டியிடம், ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருவதுடன், அங்கு வேலை செய்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துய்மா வீதியில் மூதாட்டிக்கு சொந்தமான ஓட்டலை, வாணரப்பேட்டையைச் சேர்ந்த நபர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். குத்தகை தொடர்பாக 2017ம் ஆண்டு இரு தரப்பிற்கும் இடையே பிரச்னை எழுந்ததால், வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்துள்ள புகாரின் உண்மை தன்மை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us