sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மக்கள் நீதிமன்றத்தில் 8 வழக்குகளுக்கு தீர்வு

/

மக்கள் நீதிமன்றத்தில் 8 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 8 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 8 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : ஜன 26, 2025 08:46 AM

Google News

ADDED : ஜன 26, 2025 08:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மக்கள் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு, ரூ.42.22 லட்சம் முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் தேங்கி வரும் புகார்களை, குறிப்பிட்ட கால கட்டத்தில், தீர்வு காணும் நோக்கில், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் அடங்கிய அமர்வில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் இருந்து, 15 வழக்குகள் சமாதானத்திற்கானது என கண்டறியப்பட்டு, பேச்சு வார்த்தை மூலம், 8 வழக்குகள் உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில், தீர்வு காணப்பட்ட 42 லட்சத்து 22 ஆயிரத்து 93 ரூபாயை, முறையீட்டாளர்களுக்கு சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி வழங்கினார்.

வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜ்பிரகாஷ், மூத்த வழக்கறிஞர்கள் மோகன்தாஸ், சுரேஷ், ஆனந்தபாபு மற்றும் கமலினி, லட்சுமணன், ராமதாஸ், தேவேந்திரன், கண்ணன், அசோக், அருள்தாஸ் உட்பட சட்ட கல்லுாரி மாணவர்கள், காப்பீட்டு நிறுவன மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை நுகர்வோர் குறை தீர்வு ஆணைய பதிவாளர் விஜயா ரவிந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us