கொள்ளையடிக்க சதி திட்டம்: லாஸ்பேட்டையில் 8 பேர் கைது
கொள்ளையடிக்க சதி திட்டம்: லாஸ்பேட்டையில் 8 பேர் கைது
UPDATED : மே 24, 2026 07:14 PM
ADDED : மே 24, 2026 07:11 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் கத்தியுடன் பதுங்கியிருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி ஒரு கும்பல் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கத்தியுடன் மறைந்திருந்த 8 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், லாஸ்பேட்டையை சேர்ந்த வேலு மகன்டக்கி விக்கி (எ) விக்னேஸ்வரன், 27; பாபு மகன் குஸ்காபாஸ்கர் (எ) பாஸ்கர் 23; பாலமுருகன் மகன் ரைஸ் என்கிற அகிலன், 23; முருகன் மகன் நாராயணன், 29; மூர்த்தி மகன் ஹரிஹரன், 29; செல்வமணி மகன் ஏர்போர்ட் (எ) ஹரிபிரசாத், 18; வெங்கடேசன் மகன் மனோஜ், 20; பரந்தாமன் மகன் பிரவீன், 22, என்பதும் அவர்கள் அப்பகுதியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
