sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மீனவரை கத்தியால் வெட்டிய 8 வாலிபர்கள் கைது

/

 மீனவரை கத்தியால் வெட்டிய 8 வாலிபர்கள் கைது

 மீனவரை கத்தியால் வெட்டிய 8 வாலிபர்கள் கைது

 மீனவரை கத்தியால் வெட்டிய 8 வாலிபர்கள் கைது


ADDED : டிச 16, 2025 05:40 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், மீனவரை வழிமறித்து கத்தியால் வெட்டி 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், 45; மீனவர். இவரது உறவினர் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி, தவளக்குப்பம் அருகே திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு காரில் வந்தவர்கள், காரை சாலையில் நிறுத்தி விட்டு மண்டபத்திற்கு சென்றனர். அவ்வழியாக பைக்கில் வந்த பூரணாங்குப்பத்தை சேர்ந்த பிரவீன், 28; இவருடன் வந்தவர் ஹாரன் அடித்தார்.

இதில் ஆத்திரமடைந்த வெற்றிவேல் அவரது உறவினர்கள் சேர்ந்து பிரவீனை தாக்கியதில், அவர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், வெற்றிவேல், அவரது மனைவி சசிகுமாரி, 42; இருவரும் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் காரில் சென்று போது, தவளக்குப்பம் அருகே கும்பல் ஒன்று காரை வழிமறித்து, வெற்றிவேலை கத்தியால் சரமாறியாக வெட்டி, அவரது மனைவியை தாக்கினர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நல்லவாடு மீனவர்கள் நேற்று காலை 10:00 மணியளவில், தவளக்குப்பம் சந்திப்பில், மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் எஸ்.பி., ஜி ந்தா கோதாண்டராமன், சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பூரணாங்குப்பத்தை சேர்ந்த ஏழுமலை, 25; தர்மராஜ், 22; குருமூர்த்தி, 22; அரிஹரன், 19; விஷ்வா, 19; யஷ்வந்த், 21; சரவணன், 20; ரகு, 20 ஆகிய 8 பேரை, கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us