/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி வழங்க கோரி ஊர்வலம் புதுச்சேரியில் 87 பேர் கைது
/
பணி வழங்க கோரி ஊர்வலம் புதுச்சேரியில் 87 பேர் கைது
பணி வழங்க கோரி ஊர்வலம் புதுச்சேரியில் 87 பேர் கைது
பணி வழங்க கோரி ஊர்வலம் புதுச்சேரியில் 87 பேர் கைது
ADDED : ஜன 21, 2026 05:13 AM
புதுச்சேரி: பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி, காதில் பூ வைத்து, ஊர்வலம் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பணி வழங்க வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி வழங்காமல் இருந்து வருகிறது.
இதை கண்டித்து, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில், புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், காதில் பூ வைத்து, அண்ணா சாலை, அருகில், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து,அண்ணா சாலையில் இருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்ற 27 பெண் உட்பட 87 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

