sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாய்க்காலில் அழுகிய சடலம் புதுச்சேரியில் பரபரப்பு

/

வாய்க்காலில் அழுகிய சடலம் புதுச்சேரியில் பரபரப்பு

வாய்க்காலில் அழுகிய சடலம் புதுச்சேரியில் பரபரப்பு

வாய்க்காலில் அழுகிய சடலம் புதுச்சேரியில் பரபரப்பு


ADDED : செப் 29, 2024 04:20 AM

Google News

ADDED : செப் 29, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கருவடிக்குப்பம் அருகே வாய்க்காலில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, கருவடிக்குப்பம் அருகே வெள்ளவாரி வாய்க்காலில், நேற்று மாலை 6:00 மணியளவில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. தகவலறிந்த, லாஸ்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை புதுச்சேரி தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தியதில் இறந்தவர், சோலை நகரை சேர்ந்த வேலு, 50; எனவும், இவர் அடிக்கடி, கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள சாராயக்கடையில் மது குடித்து வந்ததும் தெரியவந்தது.

அவர், 3 நாட்களுக்கு முன், வாய்க்காலில் விழுந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். தகவலறிந்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது.

போலீசார் குழப்பம்

வாய்க்காலில் இறந்து கிடந்தவரின் உடல் எந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ளது என போலீசார் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. முதலில், லாஸ்பேட்டை போலீசார், விசாரணை நடத்தினர். பின், இது எங்கள் போலீஸ் ஸ்டேஷன் எல்லை இல்லை. முத்தியால்பேட்டை போலீஸ் எல்லையில் உள்ளது' என, கூறிவிட்டு சென்றனர்.இறுதியில் அது லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லை என்பதை உறுதியானது. அதன் பிறகு லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.








      Dinamalar
      Follow us