ADDED : ஆக 29, 2026 11:53 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அதிக மின்ழுத்தம் ஏற்பட்டு டிரான்பார்பரில் ஏற்பட்ட தீ விபத்தால் தவளக்குப்பத்தில் மின்தடை ஏற்பட்டது.
தவளக்குப்பம் – அபிேஷகப்பாக்கம் சாலை, தாமரை நகர் அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று இரவு 9:20 மணியளவில் டிரான்பார்மரில் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த, தவளக்குப்பம் மின்துறை ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தினர்.
டிரான்பார்மரில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்த பின், அப்பகுதியில் மின்விநியோகம் வழங்கப்பட்டது. உயரழுத்தம் காரணமாக தீப்பிடித்தாக மின்துறையினர் தெரிவித்தனர்.
