/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரில் தகராறு; வாலிபர் அடித்து கொலை
/
பாரில் தகராறு; வாலிபர் அடித்து கொலை
ADDED : பிப் 16, 2024 07:26 AM

அரியாங்குப்பம் : புதுச்சேரி, தவளக்குப்பம் என்.ஆர்., நகரை சேர்ந்தவர் முருகையன் மகன் ஜெகதீஸ்வரன், 20; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, இவரும், அதே பகுதியை சேர்ந்த அருமைசெல்வம் மகன் ரிஷி,28; உட்பட 4 பேர் அப்பகுதியில் உள்ள பாரில் மது குடித்தனர். அப்போது, ஜெகதீஸ்வரனுக்கும், ரிஷிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை சக நண்பர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
பின்னர் ஜெகதீஸ்வரன் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, நள்ளிரவு 12:00 மணிக்கு வீட்டு வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ரிஷி அருகில் கிடந்த கட்டையை எடுத்து ஜெகதீஸ்வரனை தாக்கினார். அதில் தலையில் படுகாயமடைந்து, மயங்கி விழுந்த ஜெகதீஸ்வரனை, அவரது குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
தகவலறிந்த தவளக்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, ரிஷியை றேந்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.