sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுற்றுச்சூழல் துறை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் திட்டம் துவக்கம்

/

சுற்றுச்சூழல் துறை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் திட்டம் துவக்கம்

சுற்றுச்சூழல் துறை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் திட்டம் துவக்கம்

சுற்றுச்சூழல் துறை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் திட்டம் துவக்கம்


ADDED : அக் 26, 2024 06:15 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: ஏம்பலம் கிராமத்தில், சுற்றுச்சூழல் துறை சார்பில், தாயின் பெயரில் வீட்டுக்கு ஒரு மரம் திட்டத்தை, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், பசுமை புதுச்சேரி இயக்கத்தின் கீழ், தாயின் பெயரில் வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கிட திட்டமிட்டப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா, ஏம்பலம் கிராமத்தில் நேற்று நடந்தது. இதில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஒவ்வொரு வீட்டிற்கும் மரக்கன்றுகள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் நோக்கவுரையாற்றினார்.

சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொய்யா, நாவல், எலுமிச்சை, நெல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக் கன்றுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் உதவி பொறியாளரர் தேவநாதன், திட்ட அதிகாரிகள் பன்னீர்செல்வம், சாந்தலட்சுமி, விமல்ராஜ், தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us