நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வில்லியனுார், தட்டாஞ்சாவடி செந்தாமரை நகரைச் சேர்ந்தவர் ரேஷ்மா, 23; பூமியான்பேட் பகுதியில் உள்ள தனியார் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார்.
இவர், கடந்த 18ம் தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை காளிதாஸ் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.