ADDED : ஆக 23, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சுப்பரமணிய சுவாமி கோவிலில் ஆவணி விழாவையொட்டி, நேற்று சுவாமிக்கு பச்சை சாந்தி அலங்காரம் நடந்தது.
புதுச்சேரி சாரம் முத்துவிநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் 3ம் ஆண்டு சண்முகர் ஆவணி மாத விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி அன்று முதல் 24ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷகம், ஆராதனைகளும், இரவு சுவாமி உள்புறப்பாடு நடந்து வருகிறது.
நேற்று சுப்பரமணிய சுவாமிக்கு பச்சை சாந்தி அலங்காரம் நடந்தது. முன்தாக சுவாமிக்கு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. இரவு சுவாமி உள்புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன்.நீலகண்டன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
