/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜாமினில் வந்தவர் தலைமறைவு கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
/
ஜாமினில் வந்தவர் தலைமறைவு கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
ஜாமினில் வந்தவர் தலைமறைவு கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
ஜாமினில் வந்தவர் தலைமறைவு கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
ADDED : ஜன 21, 2026 05:20 AM
புதுச்சேரி: போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ளவரை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
கோரிமேடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த் (எ) ஆடியபாதம், 39. இவர் மீது, 2013ம் ஆண்டு போக்சோ பிரிவின் கீழ் கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின், ஜாமினில் வெளியே வந்த அவரை, வழக்கு விசாரணைக்கு ஆஜராக போக்சோ விரைவு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. போலீசார் சம்மனை வழங்க சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. அவர், தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதையடுத்து, ஆடியபாதம் வரும் 23ம் தேதி காலை 10:00 மணிக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

