/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் நடுநிலைப் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி
/
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் நடுநிலைப் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் நடுநிலைப் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் நடுநிலைப் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : நவ 19, 2024 07:16 AM

வில்லியனுார்: வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் சி.பி.எஸ்.இ., நடுநிலைப் பள்ளியில்,' தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி நடந்தது.
புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டியின், பள்ளி அளவிலான போட்டி வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் சி.பி.எஸ்.இ., நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளியின் முதல்வர் ஷாலினி மற்றும் ஒருங்கிணைப்பாளர் லலிதா ஆகியோர் தலைமை தாங்கினார். போட்டியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர். 8 அணிகளாக பிரித்து இறுதி சுற்று போட்டி நடந்தது.
இதில், ஏழாம் வகுப்பு மாணவியர்கள் யாழினி மற்றும் ஸ்ரீவர்ஷினி அணி முதலிடம் பிடித்தனர். 8 ம் வகுப்பு மாணவியர்கள் கனிஷ்காஸ்ரீ மற்றும் அக் ஷயா அணி 2வது இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளை பள்ளி முதல்வர் ஷாலினி மற்றும் ஒருங்கிணைப்பாளர் லலிதா ஆகியோர் வழங்கி பாராட்டினார். பள்ளி அளவில் வெற்றி பெற்ற முதல் இரு இடங்களை பிடித்த அணியினர் மெகா வினாடி வினா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.