/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை தேவை
/
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை தேவை
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை தேவை
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை தேவை
ADDED : மார் 15, 2025 10:26 PM

அரும்பார்த்தபுரம் - நுாறடிச்சாலை புதிய பைபாஸ் சாலை, வி.மணவெளி சாலை சந்திப்பு பகுதியில் வேகத்தடை இல்லாததால், தினமும் விபத்துக்கள் நடந்து வருகிறது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் முதல் இந்திரா சிக்னல் வரை சாலை விரிவாக்கம் செய்யாததால், மூலக்குளம் முதல் இந்திரா சிக்னல் வரை காலை, மாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்து வருகின்றன.
இதற்கு தீர்வாக, அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் துவங்கி ரெட்டியார்பாளையம், ஜான்பால் நகர் வழியாக நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலம் வரை 4.5 கி.மீ., துாரத்திற்கு புதிய பைபாஸ் அமைக்கப்பட்டது.
இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வது மட்டுமே தெரியும். அதே நேரத்தில் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்வது தெரியாத வகையில் சென்டர் மீடியனை உயரமாக அமைத்துள்ளனர்.
இந்த சாலையில் மின் விளக்குகள் இதுவரை பொருத்தப்படவில்லை. 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் முறைப்படி பைபாஸ் திறக்கப்படவில்லை. இதனால் மூலக்குளம் முதல் இந்திரா சிக்னல் வரை ஏற்படும் டிராபிக்கில் சிக்கி கொள்வதை தவிர்க்க ஏராளமான கனரக மற்றும் இலகு ரக வாகன ஓட்டிகள் அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையை பயன்படுத்த துவங்கி விட்டனர்.
விசாலமான சாலையால் வாகனங்கள் விரைவாக நுாறடிச்சாலையை அடைந்து விடுகின்றனர். அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தின் கீழ் வரும் 2 சர்வீஸ் சாலைகள், புதிய பைபாஸ் சாலை மற்றும் வி.மணவெளி என, நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தினசரி வாகன விபத்துகள் நடந்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பைபாஸ் சாலையில், வி.மணவெளி ரோடு, மேம்பால சர்வீஸ் சாலைகள் சந்திக்கும் பகுதியில் வேகத்தடை ஏற்படுத்தினால், விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
எனவே, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு, பைபாசில் இணையும் சர்வீஸ் சாலைகளில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.