sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வருங்கால வைப்பு நிதி நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை பாயும்

/

வருங்கால வைப்பு நிதி நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை பாயும்

வருங்கால வைப்பு நிதி நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை பாயும்

வருங்கால வைப்பு நிதி நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை பாயும்


ADDED : ஜன 28, 2024 04:19 AM

Google News

ADDED : ஜன 28, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மீது, சிறப்பு வசூல் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆன்ட்ரூவ் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளர் வருங்கால நிதி நிறுவனம் வருங்கால வைப்பு நிதி செலுத்த தவறிய நிறுவனங்களிடமிருந்து, நிலுவை தொகையை வசூலிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க உள்ளது.

அதன்படி, கடந்த டிசம்பர் முதல் அடுத்த மாதம் பிப்ரவரி வரை மூன்று மாதங்கள் செயல்படுத்த இருக்கிறது.

எனவே, நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதியில் நிலுவையில் உள்ள அனைத்து தொகைகளையும் உடனடியாக செலுத்தி மேல் நடவடிக்கைகளான, நிறுவனங்களின் வங்கி கணக்கு முடக்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் போன்றவற்றை தவிர்த்து கொள்ளலாம்.

மேலும், சிறப்பு வசூல் அதிகாரி நியமனம், மற்றும் கைது சிறை அடைப்பு போன்ற மீட்பு நடவடிக்கைகளின் மூலம் எழும் விரும்பத்தகாத விளைவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us