ADDED : மார் 08, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆதிதிராவிடர் நலத்துறை பெண் அலுவலர்களின் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடந்தது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அரசு துறைகளில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் 'வாக்காளர் உறுதிமொழி' எடுத்துக் கொள்ள, தேர்தல் துறை அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து நேற்று நடந்த நிகழ்வில், அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நல அதிகாரி அமிர்த வள்ளி தலைமை தாங்கி, உறுதிமொழி வாசித்தார். துறை இயக்குநர் இளங்கோவன், பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
முதுநிலை கணக்கு அதிகாரி ஸ்ரீதரன், துறை கண்காணிப்பாளர்கள் பழனி, வேல்முருகன், கதிரவன், செல்வமணி, ஜெகநாதன் மற்றும் நல அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

