/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரெஞ்சு கலைஞர்கள் சாகச நடன நிகழ்ச்சி
/
பிரெஞ்சு கலைஞர்கள் சாகச நடன நிகழ்ச்சி
ADDED : அக் 27, 2024 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் பிரெஞ்சு துாதரகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் மற்றும் அலையான்ஸ் பிரான்சிஸ் சார்பில், பிரெஞ்சு கலைஞர்களின் ரோசியோ வான்வழி (அந்தரத்தில்) சாகச நடன நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதாவது 6 மீட்டர் உயரமுள்ள கம்பிகளின் மேல் நின்றபடி கலைஞர்கள் இசைக்கு தகுந்தாற்போலவும், காற்று வீசும் திசைக்குகேற்பவும் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடினர். இந்த சாகச நடன நிகழ்ச்சியை கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.