/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அகோர மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
அகோர மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஏப் 05, 2025 04:29 AM

வில்லியனுார்:கோட்டைமேடு அகோர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வில்லியனுார், கோட்டைமேட்டில் உள்ள அகோர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழா கடந்த 31ம் தேதி துவங்கியது. 1ம் தேதி மகாலட்சுமி ேஹாமம் மற்றும் கோ பூஜையும், 2ம் தேதி மாலை முதல் காலயாகசாலை பூஜை, 3ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, இரவு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 9:30 மணியளவில் கடம்புறப்பாடு, காலை 10:05 மணியளவில் விமானம் மற்றும் ராஜகோபுரம் கும்பாபிஷேகம், 10:15 மணியளவில் மூலஸ்தான அகோர மாரியம்மன் மற்றும் பரிவார கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாரன், முன்னாள் சேர்மன் பாலமுருகன், ரவிக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

