sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மது விற்பனை நேரம் நீட்டிப்பு

/

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மது விற்பனை நேரம் நீட்டிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மது விற்பனை நேரம் நீட்டிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மது விற்பனை நேரம் நீட்டிப்பு


ADDED : டிச 20, 2024 03:48 AM

Google News

ADDED : டிச 20, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் கட்டி நள்ளிரவு 1:00 மணி வரை மது விற்பனை நேரத்தை நீட்டித்து கொள்ளலாம் என, கலால் துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 560 மதுபான கடைகள் உள்ளன. இந்த மதுக்டைகளில் எப்.எல்-1 எனப்படும் மொத்த மது விற்பனை மதுக்கடைகள், எப்.எல்-2 எனப்படும் சில்லறை மதுவிற்பனை கடைகள் காலை 8:00 முதல் இரவு 11:00 மணி வரை வழக்கம்போல் திறந்து செயல்படுகின்றன. சுற்றுலா பிரிவின் கீழ் உள்ள ஓட்டல்கள், ரெஸ்ட்ரண்டுகள் இரவு 12:00 மணி வரை திறந்திருக்கும். கள்ளு, சாராயக்கடைகள் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மதுகடைக்கடைகளின் நேரத்தை நள்ளிரவு 1:00 மணி வரை பணம் கட்டி நீட்டித்து கொள்ளலாம் என, கலால் துறை அறிவித்துள்ளது. எப்.எல்-1 மற்றும் எப்.எல்-2 மது கடைகள் இரவு 11:00 மணியில் இருந்து 11.30 மணி வரை நேரத்தை அதிகரிக்க 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

பாருடன் கூடிய எப்.எல்..,-2 மதுக் கடைகள் நள்ளிரவு 1:00 மணி வரை நேரத்தை பணம் கட்டி நீட்டித்து கொள்ளலாம். இதற்காக 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதேபோல் எப்.எல்.,-2 சுற்றுலா பிரிவில் உள்ள பார்கள் நள்ளிரவு 12:00ல் இருந்து 1:00 மணி வரை விற்பனை நேரத்தை அதிகரிக்க 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதர சிறப்பு நிகழ்ச்சியில் நள்ளிரவு 1:00 மணி வரை மது விற்பனை அனுமதிக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்து வரும் ஓட்டல்கள் இதுவரை கலால் உரிமம் இல்லையென்றாலும், புத்தாண்டு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விற்பனை செய்யலாம். இதற்காக, அனைத்து துறைகளின் அனுமதியை பெற்று கலால் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us