/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை
ADDED : ஜன 03, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சமூக நலத்துறை மூலம் மணவெளி தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது.
தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் செல்வம், 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆணை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சுகுமாரன், கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், சமூக நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.