ADDED : ஏப் 14, 2026 07:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது உருவ படத்திற்கு மலர்த்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
அரியாங்குப்பம், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆணையர் விநாயகமூர்த்தி, அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர்த்துாவி மரியாதை செலுத்தினார். உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப்பொறியாளர் சரஸ்வதி, அகிலன் உட்பட ஊழியர்கள் பங்கேற்றனர்.
மேலும், அபிேஷகப்பாக்கம் மற்றும் டி.என்., பாளையம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

