ADDED : பிப் 11, 2025 06:16 AM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம், 84; இவர், முதியோர் உதவி தொகை வாங்குவதற்காக கடந்த 30ம் தேதி, தவளக்குப்பம் பகுதி வங்கிக்கு சென்றார்.ஆனால் அவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
