sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம்... வரவேற்பு; இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்குமா?

/

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம்... வரவேற்பு; இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்குமா?

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம்... வரவேற்பு; இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்குமா?

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம்... வரவேற்பு; இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்குமா?


ADDED : ஜூன் 13, 2024 12:17 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, குறிப்பிட்ட சதவீத இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இவர்களுக்கான சென்டாக் லேட்ரல் என்ட்ரி சேர்க்கை விண்ணப்ப படிவங்கள், ஆன்-லைனில் (www.centacpuducherry.in) நேற்று முதல் வினியோகிக்கப்படுகிறது. அதில், மாணவர்கள் கல்வித் தகுதியை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். வரும் 26ம் தேதி மாலை 6:00 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்ப பதிவு வரவேற்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்


எஸ்.சி.,எஸ்.டி.,மாற்றுதிறனாளி மாணவர்கள் 500 ரூபாயும், இதர பிரிவு மாணவர்கள் 1,000 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

எவ்வளவு சீட்டு


புதுச்சேரியில் இரண்டு அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மொத்தம் 334 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சீட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாப் அப் கவுன்சிலிங்கிற்கு பிறகு காலியிடங்கள் இருந்தால், பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிற மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி மாநிலத்தில் மூன்று அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மொத்தம் 334 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சீட்கள் உள்ளன. ஆனால் கடந்தாண்டு 236 மாணவ, மாணவியர் தான் லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பித்தனர். இதனால் கடந்தாண்டு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் எந்தவித போட்டியும் இல்லாமல் சீட் கிடைத்தது.

என்ன காரணம்


புதுச்சேரி மாநிலத்தில் ஆறு அரசு பாலிடெக்னிக், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மொத்தம் 2,200 சீட்கள் உள்ளன. அப்படி இருந்தும், கடந்த நான்கு ஆண்டுகளாகவே குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பி.டெக்., லேட்ரல் சேர்க்கைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப துறை உச்சத்தில் இருந்தபோது பி.டெக் படிப்பு, பாலிடெக்னிக் மாணவர்களின் கனவு படிப்பாக இருந்தது.

இதன் காரணமாக பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ முடித்து லேட்ரல் முறையில் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாமாண்டு சேர ஆர்வம் காட்டினர்.

ஆனால் இன்றைக்கு தகவல் தொழில்நுட்ப துறையின் நிலைமை அப்படி இல்லை. அத்துறையில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு தலைகீழாக மாறிவிட்டது. படித்தவர்களுக்கு வேலையில்லை. சம்பளமும் குறைவாகவே கிடைக்கிறது.

அதேநேரத்தில் பாலிடெக்னிக் முடித்த உடனே நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து விடுகிறது. பொறியியல் கல்லுாரிகளில் கல்வி கட்டணம் உயர்வும், சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணம். அதனால், எதிர்காலம் இல்லாத பொறியியல் படிப்புகளை தவிர்க்க துவங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி மாநிலத்தில் 2,200 பாலிடெக்னிக் சீட்டுகள் இருந்தாலும் குறைவான எண்ணிக்கையில் தான் தேர்ச்சி பெறுகின்றனர்.

இதன் காரணமாகவே பி.டெக்., லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க்கை டல் அடிக்க துவங்கியுள்ளது. எனவே இந்தாண்டாவது பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம் அதிகமாக குவியுமா என கவலையுடன் சென்டாக் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.






      Dinamalar
      Follow us